Sunday, 11 November 2012

தூதுவளை தோசை:

தேவையான பொருட்கள்:


1. புழுங்கலரிசி -  1 கப்

2. தூதுவளை இலை - 15

3. மிளகு - 10

4. சீரகம் - 1/2 தேக்கரண்டி

5. பச்சை மிளகாய்  - 2

6. உப்பு - தேவைக்கேற்ப

7. எண்ணை + பசுநெய் - தேவையான அளவு.

செய்முறை:


புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸ்யிலோ அல்லது ஆட்டுகல்லிலோ பச்சை மிளகாய், மிளகு சீரகம், தூதுவளை இலை உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும்.

பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக  மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி பசுநெய் + எண்ணையைக்  கலந்து அதை, சுற்றிவர ஊற்றி,  திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். 

மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை.  ஆனால் சூடாக சாப்பிட்டால்தான் சுவை.




 

No comments:

Post a Comment