Sunday, 9 December 2012

இஞ்சித் துவையல்

 

தேவையான பொருட்கள் :

1. இஞ்சி  -  பெரிய துண்டு,

2. காய்ந்த மிளகாய் - 2

3. உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

4. கறிவேப்பிலை  -  ஒரு கைப்பிடி அளவு

5. புளி  - பெரிய நெல்லிக்காய் அளவு

6.  எண்ணை - வதக்க தேவையான அளவு

7. உப்பு - சுவைக்கேற்ப

 

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்  .  கடாயில் எண்ணை 

விட்டு இஞ்சி, கறிவேப்பிலையை  வதக்கவும்.  காய்ந்த மிளகாய்,

உளுத்தம்பருப்பை  தனியாக வறுக்கவும்.


வதக்கிய, மற்றும் வறுத்த பொருட்களை ஒன்றாக்கி, அவற்றுடன்  புளி ,

உப்பு சேர்த்து மிக்ஸ்யில் கெட்டியாக அரைக்கவும் .


சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.  சளி,

இருமல்,  போன்ற உபாதை  இருக்கும் போது சாப்பிட சீக்கிரம்

குணமாகும்.  மலச்சிக்கல் இருக்காது.












No comments:

Post a Comment