தேங்காய்பொங்கல்
தேவையான அளவு :
1. அவல் - 1 கப்
2. தேங்காய் துருவல் - 1 கப்
3. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
4. சீரகத்தூள் - 3/4 தேக்கரண்டி
5. பசுநெய் - 2 தேக்கரண்டி
6. முந்திரி பருப்பு - 3 தேக்கரண்டி
7. உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
அவலை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம்
ஊறவைக்கவும் . பின்பு இதனுடன் தேங்காய்த்துருவல் , மிளகுத்தூள் ,
சீரகத்தூள் , உப்பு ஆகியவற்றை கொட்டி, நெய்யில் வறுத்த
முந்திரியையும் போட்டு மொத்தக் கலவையையும் லேசாகக்
கிளறினால் அதுவே தேங்காய் பொங்கல்.
குடல் புண் உள்ளவர்களுக்கு சிறந்த உணவு. காலை உணவாக இதை
உட்கொண்டால் வயறு இதமாக இருக்கும்.
No comments:
Post a Comment