கீரை பொரித்த குழம்பு
தேவையான பொருட்கள் :
1. முளைக்கீரை ( ஆய்ந்து பொடியாக நறுக்கியது )- 1 கப்
2. நாட்டுப் பொன்னாங்கண்ணி கீரை -
( ஆய்ந்து பொடியாக நறுக்கியது )- 1 கப்
3. முருங்கைக்கீரை ஆய்ந்தது - 1 கப்
4. துவரம்பருப்பு - 1/2 கப்
5. பாசிப்பருப்பு - 1/2 கப்
6. தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி
7. சீரகம் - 1 தேக்கரண்டி
8. மிளகு - 1/2 தேக்கரண்டி
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10 உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
11. எண்ணெய் - 2 தேக்கரண்டி
12. பெருங்காயத்தூள் - சிறிதளவு
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
குக்கரில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு போட்டு வேக வைத்து 4 விசில்
வந்ததும் இறக்கவும். கீரைகளை உப்பு சேர்த்து வேகவிடவும் .
கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய்த்துருவல் , சீரகம், மிளகு
மூன்றையும் வறுத்து நைசாக அரைத்து, வேக வைத்த கீரையுடன்
கலக்கவும்.
அதில் வேக வைத்த பருப்பை சேர்த்துக் கொதிக்க வைக்கவும் . கடுகு,
உளுத்தம்பருப்பு , பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி கலந்து
இறக்கவும்.
குறிப்பு : இதற்கு மாங்காய் இனிப்பு பச்சடி சிறந்த ஜோடி .
மேலும் உணவில் பருப்பு எப்பொழுது சேர்த்தாலும் பசுநெய்யுடன்
சாப்பிடுவதே சிறந்தது.
கீரை பொரித்த குழம்பு வயதானவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல்
தடுக்கும்..
No comments:
Post a Comment