Saturday, 15 December 2012

கீரை பொரித்த குழம்பு


தேவையான பொருட்கள் :


1.  முளைக்கீரை   ( ஆய்ந்து பொடியாக நறுக்கியது )-   1 கப்

2.  நாட்டுப் பொன்னாங்கண்ணி கீரை  - 
                                       ( ஆய்ந்து பொடியாக நறுக்கியது )-   1 கப்

3.  முருங்கைக்கீரை   ஆய்ந்தது   -  1 கப் 

4.  துவரம்பருப்பு   -  1/2 கப்

5.  பாசிப்பருப்பு  -  1/2 கப்

6.  தேங்காய்த்துருவல்   -  4 தேக்கரண்டி

7.  சீரகம்  -  1 தேக்கரண்டி

8.   மிளகு  -  1/2 தேக்கரண்டி

9.  கடுகு   -  1/2 தேக்கரண்டி

10  உளுத்தம்பருப்பு   -  1/2 தேக்கரண்டி

11.  எண்ணெய்  -  2 தேக்கரண்டி

12.  பெருங்காயத்தூள்   -  சிறிதளவு

13.  உப்பு  -  தேவையான அளவு


செய்முறை  :



குக்கரில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு போட்டு   வேக  வைத்து 4 விசில்

வந்ததும் இறக்கவும்.  கீரைகளை  உப்பு சேர்த்து வேகவிடவும் .


கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய்த்துருவல் , சீரகம், மிளகு

மூன்றையும் வறுத்து நைசாக அரைத்து, வேக வைத்த கீரையுடன்

கலக்கவும்.



அதில் வேக வைத்த பருப்பை சேர்த்துக் கொதிக்க வைக்கவும் .  கடுகு,

உளுத்தம்பருப்பு , பெருங்காயத்தூள்  தாளித்துக் கொட்டி கலந்து

இறக்கவும்.



குறிப்பு :  இதற்கு மாங்காய் இனிப்பு பச்சடி சிறந்த ஜோடி .

மேலும்   உணவில் பருப்பு எப்பொழுது சேர்த்தாலும் பசுநெய்யுடன்

சாப்பிடுவதே சிறந்தது.


கீரை பொரித்த குழம்பு  வயதானவர்களுக்கு  மலச்சிக்கல்  ஏற்படாமல் 

தடுக்கும்..




































       

No comments:

Post a Comment