Saturday, 15 December 2012

கலவைக்காய் கூட்டு


தேவையான  பொருட்கள் :


1. பாகற்காய்    -  6  துண்டுகள் (50 கிராம் )

2. சர்க்கரைவள்ளிக் கிழங்கு   -  50 கிராம்

3.  பரங்கிக்காய்   -  50 கிராம்

4.  பூசணிக்காய்   -  50 கிராம்

5.  மொச்சை (தோலுரித்தது)  -  1 கப்

6.  அவரைக்காய்   -  5

7.  வாழைக்காய்  -  1/2 காய் (பாதி வாழைக்காய் )

8.  பீன்ஸ்  -  10 

9.  கேரட்  -  1 

10. பச்சை மிளகாய்   -  1 

11.  தேங்காய்த்துருவல்   -  1 கப்

12.  சீரகம்   -  1  தேக்கரண்டி

13.  கடுகு  -  1/2  தேக்கரண்டி

14.  கடலைப்பருப்பு  -  1  மேஜைக்கரண்டி

15.  தனியா  -  1  மேஜைக்கரண்டி

16.  எண்ணெய்  - தாளிக்க தேவையான அளவு

17.  உப்பு -  தேவையான அளவு

18.  கறிவேப்பிலை  - சிறிதளவு.



செய்முறை:


எல்லா காய்களையும்   நன்றாக   கழுவி  சுத்தம் செய்து ,  சம அளவாக 

நறுக்கிக்கொள்ளவும் .  பிறகு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும் .


கடாயில்  எண்ணெய்  விட்டு  சீரகம், பச்சை மிளகாய் , தனியா ,

கடலைப்பருப்பு , தேங்காய்த்துருவல்   ஆகியவற்றை வறுத்து ஆற

வைத்து,  சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்யில்  அரைக்கவும் . 


வேக வைத்துள்ள காய்கறிகளுடன்   அரைத்ததை விட்டு  , சிறிது  நேரம் 

கொதித்தவுடன் , ... கடுகு, கறிவேப்பிலையை   தாளித்து   அதில்

சேர்க்கவும். எல்லாம்   ஒன்றாகக்   கலந்து   வந்ததும் இறக்கிப்  

பரிமாறவும்.


 உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது.

நார்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால்  வயிற்றுக்கு இதமாக

இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும் தன்மையுடையது .

கீரை பொரித்த குழம்பு


தேவையான பொருட்கள் :


1.  முளைக்கீரை   ( ஆய்ந்து பொடியாக நறுக்கியது )-   1 கப்

2.  நாட்டுப் பொன்னாங்கண்ணி கீரை  - 
                                       ( ஆய்ந்து பொடியாக நறுக்கியது )-   1 கப்

3.  முருங்கைக்கீரை   ஆய்ந்தது   -  1 கப் 

4.  துவரம்பருப்பு   -  1/2 கப்

5.  பாசிப்பருப்பு  -  1/2 கப்

6.  தேங்காய்த்துருவல்   -  4 தேக்கரண்டி

7.  சீரகம்  -  1 தேக்கரண்டி

8.   மிளகு  -  1/2 தேக்கரண்டி

9.  கடுகு   -  1/2 தேக்கரண்டி

10  உளுத்தம்பருப்பு   -  1/2 தேக்கரண்டி

11.  எண்ணெய்  -  2 தேக்கரண்டி

12.  பெருங்காயத்தூள்   -  சிறிதளவு

13.  உப்பு  -  தேவையான அளவு


செய்முறை  :



குக்கரில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு போட்டு   வேக  வைத்து 4 விசில்

வந்ததும் இறக்கவும்.  கீரைகளை  உப்பு சேர்த்து வேகவிடவும் .


கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய்த்துருவல் , சீரகம், மிளகு

மூன்றையும் வறுத்து நைசாக அரைத்து, வேக வைத்த கீரையுடன்

கலக்கவும்.



அதில் வேக வைத்த பருப்பை சேர்த்துக் கொதிக்க வைக்கவும் .  கடுகு,

உளுத்தம்பருப்பு , பெருங்காயத்தூள்  தாளித்துக் கொட்டி கலந்து

இறக்கவும்.



குறிப்பு :  இதற்கு மாங்காய் இனிப்பு பச்சடி சிறந்த ஜோடி .

மேலும்   உணவில் பருப்பு எப்பொழுது சேர்த்தாலும் பசுநெய்யுடன்

சாப்பிடுவதே சிறந்தது.


கீரை பொரித்த குழம்பு  வயதானவர்களுக்கு  மலச்சிக்கல்  ஏற்படாமல் 

தடுக்கும்..




































       

வெந்தய தோசை


தேவையான பொருட்கள் :


1. புழுங்கல் அரிசி   -   200 கிராம் (1 ஆழாக்கு)

2. வெந்தயம்  -  4 தேக்கரண்டி (டீஸ்பூன்)

3. உளுத்தம்பருப்பு  -  1 தேக்கரண்டி

4.  எண்ணை    அல்லது பசுநெய் - தேவையான அளவு

5.  உப்பு   -  சுவைக்கேற்ப

செய்முறை:



புழுங்கல் அரிசி  , வெந்தயம்  ,  உள்ளுத்தம்பருப்பு  மூன்றையும் ஒரு

மணி நேரம்  ஒன்றாக ஊற வைத்து ,  சுத்தம் செய்து  அரைக்கவும்.

பிறகு  தேவையான அளவு உப்பு சேர்த்துக்  கலந்து , புளிக்க விடவும் .


தோசைக்கல்லில்  சிறிய தோசைகளாக வார்த்து , இருபுறமும்

எண்ணை   அல்லது பசுநெய் விட்டு பொன்னிறமாக வேகவிட்டு

எடுக்கவும்.


புதினா சட்னி , கொத்துமல்லி சட்னி சிறந்த காம்பினேஷன் ...



வெந்தயம் குளிர்ச்சி தந்து , உஷ்ணத்தைக் குறைக்கும் .  வயிற்றுவலி

குணமாகும்,

Sunday, 9 December 2012

ஆரஞ்சுத் தோல் துவையல்



தேவையான பொருட்கள்:


1.  கமலா ஆரஞ்சு தோல்   -  1  கைப்பிடி அளவு

2.  இஞ்சி  -  சிறிய துண்டு

3.  காய்ந்த மிளகாய்  - 1 

4.  உளுத்தம்பருப்பு   -  1 தேக்கரண்டி 

5.  எண்ணை   ,  உப்பு  - தேவையான அளவு

 

செய்முறை:


அரஞ்சுப்பழத் தோலை பொடியாக   நறுக்கவும்  .  கடாயில்  எண்ணெய்  

விட்டு   அதை நன்கு வதக்கவும்.  இஞ்சியை  தோல் சீவி பொடியாக

நறுக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் , உளுத்தம்பருப்பை

போட்டு வறுக்கவும் .  வதக்கிய ஆரஞ்சுத் தோல் , இஞ்சி , காய்ந்த

மிளகாய் உளுத்தம்பருப்பு ஆகியவற்றுடன்   உப்பு சேர்த்து மிக்ஸ்யில்

தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.


 சூடான சாதத்தில் இந்த துவையலை  போட்டு எண்ணெய்   விட்டு

சாப்பிட்டால் கமலா அரஞ்சு வாசனையுடன் மிகவும் ருசியாக

இருக்கும்.

வாழைத்தண்டு சாலட்



தேவையான அளவு :


1.  வாழைத்தண்டு  - 1 கப் பொடியாக நறுக்கியது

2.  மிளகுத்தூள்  -  1/4 தேக்கரண்டி 

3.  சீரகத்தூள்  -  1 தேக்கரண்டி 

4.  எலுமிச்சை சாறு    -  1  தேக்கரண்டி 

5.  தென்கைத்துருவல்  -  1/2  கப் 

6.  கேரட் துருவல்  -  2  தேக்கரண்டி  

7.  கொத்துமல்லி -   பொடியாக நறுக்கியது  1  தேக்கரண்டி

8.  கறிவேப்பிலை  -  பொடியாக நறுக்கியது  1  தேக்கரண்டி


செய்முறை :


பொடியாக நறுக்கிய வழைத்தண்டுடன்  இரண்டு கப் தண்ணீரும்  

எலுமிச்சை சாறும் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.   பின்பு 

வாழைத்தண்டுத்  துண்டுகளைப்   பிழிந்து எடுத்து வேறொரு  

பாத்திரத்தில்  போடவும்.  இதனுடன் தேங்காய், கேரட் துருவல்களையும்

கலந்து மல்லி, கறிவேப்பிலை சேர்த்து மிளகு, சீரகத்தூளுடன் ஒரு

சுற்று நன்றாக கிளறவும் .  கலவையை தட்டில் பரப்பினால் சாலட்  

அவ்வளவுதான் .


வாழைத்தண்டு சாலட் கல் நீக்கியாகவும் செயல்படுகிறது. மலச்சிக்கல்,

நீரிழிவு நோய்களுக்கு   சிறந்த மருந்து.








தேங்காய்பொங்கல் 


தேவையான அளவு :


1.  அவல்  -  1 கப்

2.  தேங்காய் துருவல்  -  1 கப்

3.  மிளகுத்தூள் -  1/4   தேக்கரண்டி

4.  சீரகத்தூள்   -   3/4 தேக்கரண்டி 

5.  பசுநெய்   -  2  தேக்கரண்டி

6.  முந்திரி பருப்பு  -  3  தேக்கரண்டி

7.  உப்பு -  சுவைக்கேற்ப


செய்முறை :


அவலை  தேவையான அளவு தண்ணீர்   சேர்த்து   பத்து  நிமிடம்  

ஊறவைக்கவும் .  பின்பு   இதனுடன்  தேங்காய்த்துருவல் ,  மிளகுத்தூள் ,

சீரகத்தூள் , உப்பு ஆகியவற்றை   கொட்டி, நெய்யில் வறுத்த

முந்திரியையும்  போட்டு மொத்தக் கலவையையும்  லேசாகக் 

கிளறினால்   அதுவே தேங்காய் பொங்கல்.


குடல் புண்  உள்ளவர்களுக்கு சிறந்த உணவு. காலை உணவாக  இதை 

உட்கொண்டால்  வயறு இதமாக இருக்கும். 














சுண்டைக்காய் குழம்பு

 

தேவையான பொருட்கள் :


1. பிஞ்சு சுண்டைக்காய்  -  ஒரு கைப்பிடி அளவு

2. புளி   -  எலுமிச்சம்பழ  அளவு

3.  வெந்தயம்  - 1/4  தேக்கரண்டி

4.  கடுகு  -  1/4  தேக்கரண்டி

5.  சாம்பார் பொடி   -  3  தேக்கரண்டி

6.  கடலைப்பருப்பு   -  ஒரு தேக்கரண்டி

7.  கறிவேப்பிலை   -  சிறிதளவு

8.  நல்லெண்ணெய்   -  தேவையான அளவு

9.  உப்பு  -  தேவையான அளவு


செய்முறை:


 கடாயில் நல்லெண்ணெய் விட்டு , லேசாக நசுக்கிய 

சுண்டைக்காயைப்  போட்டு  நன்கு  வதக்கி எடுத்துக் கொள்ளவும். 


அதே  கடாயில்  எண்ணை விட்டு  கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு 

தாளித்து  அதில் சாம்பார்   பொடி சேர்த்து வதக்கவும்.


புளியைக் கரைத்து வடிகட்டிய புளித்தண்ணீர் , வதக்கிய

சுண்டைக்காய் , உப்பு  சேர்த்துக்  கலக்கி  கொதிக்க விடவும் .  எண்ணை 

பிரிந்து  வரும்  போது ,  கறிவேப்பிலை  தூவி இறக்கவும்.  மிகுந்த   

மணத்துடன்  பார்க்கும்போதே சாப்பிட  தூண்டும்.



பித்தம் , சர்க்கரை அதிகமுள்ளவர்களுக்கு  சுண்டைக்காய் எளிய வரப்பிரசாதம்.

இதே போல் சுண்டைக்காய் வற்றல் குழம்பும் செய்யலாம் .
















இஞ்சித் துவையல்

 

தேவையான பொருட்கள் :

1. இஞ்சி  -  பெரிய துண்டு,

2. காய்ந்த மிளகாய் - 2

3. உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

4. கறிவேப்பிலை  -  ஒரு கைப்பிடி அளவு

5. புளி  - பெரிய நெல்லிக்காய் அளவு

6.  எண்ணை - வதக்க தேவையான அளவு

7. உப்பு - சுவைக்கேற்ப

 

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்  .  கடாயில் எண்ணை 

விட்டு இஞ்சி, கறிவேப்பிலையை  வதக்கவும்.  காய்ந்த மிளகாய்,

உளுத்தம்பருப்பை  தனியாக வறுக்கவும்.


வதக்கிய, மற்றும் வறுத்த பொருட்களை ஒன்றாக்கி, அவற்றுடன்  புளி ,

உப்பு சேர்த்து மிக்ஸ்யில் கெட்டியாக அரைக்கவும் .


சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.  சளி,

இருமல்,  போன்ற உபாதை  இருக்கும் போது சாப்பிட சீக்கிரம்

குணமாகும்.  மலச்சிக்கல் இருக்காது.