Tuesday, 30 October 2012

தேங்காய்பால் கேரட் அல்வா


தேவையான பொருட்கள் :

1. கேரட் -1/4 kg

2. தேங்காய்-1/2 முடி

3. கல்கண்டு  தூள் செய்தது - 1 ஆழாக்கு (200 கிராம்)

4. பசுநெய்  - 50 கிராம்

5. முந்திரி  - 25 கிராம்

6. திட திராட்சை  -  25 கிராம்

செய்முறை :

தேங்காயை துருவிக்கொள்ளவும், துருவிய தேங்காயை மிக்ஸ்யில்

போட்டு  சிறிது  வெந்நீர்  விட்டு  அரைத்து -100ml  கெட்டியான பால்

எடுக்கவும் .

 

கேரட்டை துருவிக்கொள்ளவும், அடுப்பில் வாணலியை வைத்து

இரண்டு தேக்கரண்டி பசுநெய் விட்டு  காய்ந்ததும் துருவிய கேரட்டை

போட்டு கிளறவும்.  கேரட்  கொஞ்சமாக வதந்கியதும்   தேங்காய்பால்

விட்டு  இரண்டு  நிமிடம்  கிளறி  மூடிவைக்கவும் .

 

இரு நிமிடம்  கழித்து தூள் செய்த கல்கண்டை கொட்டி கிளறவும் .

சிறிது  சிறிதாக  பசுநெய்  விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். 

கல்கண்டு  நீர்த்து   மீண்டும்  இறுக  ஆரம்பிக்கும்,  அப்போது  

முந்திரி , திராட்சை  இரண்டையும்  பசுநெய்யில்  வறுத்து  கேரட் 

அல்வாவில்  போட்டு  ஒரு கிளறு கிளறி இறக்கவும். மிகவும்

சுவையான  கேரட் அல்வா தயார்.

 

இந்த அல்வா குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும்

விரும்பி   சாப்பிடுவார்கள்.  ஊட்டசத்து மிகுந்த உணவு , 

தேங்காய்பாலும் , கல்கண்டும்  இயற்கை உணவு என்பதால் எளிதில்

ஜீரணித்து வயிறு இதமாக இருக்கும்.  மேலும் இது  இரத்த விருத்தியை

ஏற்படுத்தும்.








No comments:

Post a Comment