Saturday, 27 October 2012

முளைக்கட்டிய கொள்ளு சுண்டல் 

தேவையான பொருட்கள் :

1. கொள்ளு -1 கப் 

2. தண்ணீர் 

3. மிளகுதூள்  சிறிதளவு 

4. உப்புத்தூள் சிறிதளவு 

5. பசுநெய்  - 1 தேக்கரண்டி 

செய்முறை :1

     கொள்ளு தானியத்தை  ஒரு  பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 

12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு ஒரு  தட்டை கவிழ்த்து

மூடி தண்ணீரை வடிக்க வேண்டும். அப்படியே 24 மணி நேரம்

விட்டுவிட்டால் கொள்ளு முளைக்கட்டியிருக்கும். இந்த முளைக்கட்டிய

கொள்ளு தானியத்தை முன்று நிமிடம் ஆவியில் வேக வைத்து

எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

ஒரு தேக்கரண்டி பசுநெய் விட்டு, சுவைக்கேற்ப மிளகுதூள், உப்புத்தூள்

சேர்த்து பரிமாற வேண்டும்.

 

இது சுலபமாக செய்யக்கூடியது ,மிகவும் ஆரோக்யமானது. இதில்

அதிக அளவில் dietary fibre  உள்ளதால் எளிதில் ஜீரணமாவதுடன் உடல்

எடையை குறைக்க உதவுகிறது.

 

செய்முறை :2

       முளைக்கட்டிய கொள்ளு தானியத்தை ஆவியில் வேக வைத்து

எடுத்துக் கொள்ளவேண்டும் . வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு

தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்ததும் சிறிது

கடுகு, உளுந்து ஒரு தேக்கரண்டி  ,ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,

மிளகாய் ஒன்று ,  கருவேப்பிலை கொஞ்சம் சேர்த்து   தாளிக்கவும். 

முளைக்கட்டிய கொள்ளு, சுவைக்கேற்ப உப்பு  சேர்த்து  கிளறி இரண்டு

நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும்.

 

இதே சுண்டலை முளைக்கட்டாமல் வெறும் 18 மணி நேரம் ஊற

வைத்தும் செய்யலாம்.  

No comments:

Post a Comment