முருங்கைக்காய் சூப் :
தேவையான பொருட்கள் :
1. முருங்கைக்காய் - ஒன்று
2. கைக்குத்தல் அரிசி ரவை போல் பொடித்தது - 3 மேஜைகரண்டி
3. மிளகு தூள் சிறிது
4. உப்பு சுவைக்கேற்ப
5. கொத்தமல்லி சிறிது
செய்முறை :
முருங்கைக்காயை நன்கு கழுவி நான்கு ஐந்து துண்டுகளாக நறுக்கி
இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். முருங்கைக்காய்
வெந்தவுடன் முருங்கை துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து விடவும்.
இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். முருங்கைக்காய்
வெந்தவுடன் முருங்கை துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து விடவும்.
பிறகு முருங்கை வெந்த தண்ணீரில் அரைத்த கைக்குத்தல் அரிசியை
போட்டு வேக வைக்கவும். அதே நேரத்தில் வெந்த முருங்கை
துண்டுகளின் விழுதுகளை எடுத்துக்கொள்ளவும்.
அரிசி வெந்தவுடன் அதில் இந்த விழுதுகளை போட்டு இரண்டு நிமிடம்
கொதிக்க விட்டு உப்பு போட்டு இறக்கவும்.
பரிமாறும் போது மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்.
இந்த சூப் மிகுந்த மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். நன்கு ஜீரண
சக்தியை ஏற்படுத்தும், வயிற்றுக்கு இதமாக இருக்கும்.
சக்தியை ஏற்படுத்தும், வயிற்றுக்கு இதமாக இருக்கும்.
இந்த சூப் செய்ய 10 நிமிடம் போதுமானது.
No comments:
Post a Comment