Saturday, 27 October 2012

உணவின் தோற்றம்



நாம் இந்த உலகில் வாழ இன்றியமையாதது உணவு, உடை, உறைவிடம்.
இம்முன்றில் முதன்மையானது உணவு.  இது உயிர்களின் ஆதாரமாகவும், அடிப்படை தேடலாகவும் விளங்குகிறது இந்த உணவை நோக்கி ஆரம்பித்த பயணமே இன்று இந்த உலகம் இவ்வளவு விரிவடைய காரணமாக இருக்கிறது..

சாதாரணமாக கிழங்குகளையும் , கனிகளையும் இயற்கையாக உண்ட மனிதன், பிறகு  கிடைத்தவற்றை பக்குவப்படுத்தி  உண்ண கற்றுக்கொண்டான்.

நாக்கின் சுவையறிந்தவுடன் பக்குவப்படுத்துதலை (சமையலை ) ஒரு கலையாக பலவழிமுறைகளில்  செய்ய தொடங்கினான்.
அதனால் இந்த சமையற்கலை வளர்ந்து ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி பல்லாயிரகணக்கான உணவு வகைகளை நமக்கு தந்திருக்கிறது.

உணவுகளை தயாரித்தலோடு இந்த  கலை  முடிவடைவது இல்லை  அதை உள்ளன்போடு பரிமாறுவதும் உண்பவர்களின் நலனை எண்ணுவதும்  கூட இதை சேர்ந்ததே. 

No comments:

Post a Comment