Tuesday, 30 October 2012

தேங்காய்பால் கேரட் அல்வா


தேவையான பொருட்கள் :

1. கேரட் -1/4 kg

2. தேங்காய்-1/2 முடி

3. கல்கண்டு  தூள் செய்தது - 1 ஆழாக்கு (200 கிராம்)

4. பசுநெய்  - 50 கிராம்

5. முந்திரி  - 25 கிராம்

6. திட திராட்சை  -  25 கிராம்

செய்முறை :

தேங்காயை துருவிக்கொள்ளவும், துருவிய தேங்காயை மிக்ஸ்யில்

போட்டு  சிறிது  வெந்நீர்  விட்டு  அரைத்து -100ml  கெட்டியான பால்

எடுக்கவும் .

 

கேரட்டை துருவிக்கொள்ளவும், அடுப்பில் வாணலியை வைத்து

இரண்டு தேக்கரண்டி பசுநெய் விட்டு  காய்ந்ததும் துருவிய கேரட்டை

போட்டு கிளறவும்.  கேரட்  கொஞ்சமாக வதந்கியதும்   தேங்காய்பால்

விட்டு  இரண்டு  நிமிடம்  கிளறி  மூடிவைக்கவும் .

 

இரு நிமிடம்  கழித்து தூள் செய்த கல்கண்டை கொட்டி கிளறவும் .

சிறிது  சிறிதாக  பசுநெய்  விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். 

கல்கண்டு  நீர்த்து   மீண்டும்  இறுக  ஆரம்பிக்கும்,  அப்போது  

முந்திரி , திராட்சை  இரண்டையும்  பசுநெய்யில்  வறுத்து  கேரட் 

அல்வாவில்  போட்டு  ஒரு கிளறு கிளறி இறக்கவும். மிகவும்

சுவையான  கேரட் அல்வா தயார்.

 

இந்த அல்வா குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும்

விரும்பி   சாப்பிடுவார்கள்.  ஊட்டசத்து மிகுந்த உணவு , 

தேங்காய்பாலும் , கல்கண்டும்  இயற்கை உணவு என்பதால் எளிதில்

ஜீரணித்து வயிறு இதமாக இருக்கும்.  மேலும் இது  இரத்த விருத்தியை

ஏற்படுத்தும்.








Sunday, 28 October 2012

முருங்கைக்காய் சூப் :


தேவையான பொருட்கள் :


1. முருங்கைக்காய் - ஒன்று

2.  கைக்குத்தல் அரிசி ரவை போல் பொடித்தது - 3 மேஜைகரண்டி

3. மிளகு தூள் சிறிது

4. உப்பு சுவைக்கேற்ப

5. கொத்தமல்லி சிறிது


செய்முறை :

முருங்கைக்காயை நன்கு கழுவி நான்கு ஐந்து துண்டுகளாக நறுக்கி

இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.  முருங்கைக்காய்

வெந்தவுடன் முருங்கை துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து விடவும்.


பிறகு முருங்கை வெந்த தண்ணீரில் அரைத்த கைக்குத்தல்  அரிசியை

போட்டு  வேக வைக்கவும். அதே நேரத்தில் வெந்த முருங்கை

துண்டுகளின் விழுதுகளை எடுத்துக்கொள்ளவும்.


அரிசி வெந்தவுடன் அதில் இந்த விழுதுகளை போட்டு இரண்டு நிமிடம்

கொதிக்க விட்டு உப்பு போட்டு இறக்கவும்.

பரிமாறும் போது மிளகு தூள், கொத்தமல்லி  சேர்த்துக் கொள்ளவும்.

இந்த சூப் மிகுந்த மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். நன்கு ஜீரண

சக்தியை ஏற்படுத்தும், வயிற்றுக்கு இதமாக இருக்கும்.

இந்த சூப் செய்ய 10 நிமிடம் போதுமானது.
















கைக்குத்தல் அரிசி கஞ்சி

தேவையான பொருட்கள் : 

1. கைக்குத்தல் அரிசி - 1/2 கப்

2. மிளகு தூள் சிறிது

3. உப்புத்தூள் சுவைக்கேற்ப


செய்முறை :
  
    கைக்குத்தல் அரிசியை மிக்ஸ்யில் போட்டு சன்னமான ரவை பதத்துக்கு

அரைக்கவும்.  மூன்று டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி

கொதிக்க வைக்கவும் பிறகு  அதில் அரைத்த கைக்குத்தல் அரிசியை

போட்டு சிறு  தீயில் வேக விடவும்.  அரிசி  வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி

விடவும்.

 பரிமாறும் போது சிறிது மிளகு தூள் போட்டு  கொள்ளவும்.

எளிமையான கஞ்சி தயார்.

 இந்த கஞ்சி அரிசி நொய் கஞ்சியை போன்று சப்பென்று இல்லாமல்

ருசியாக இருக்கும்.  வயிறு நிறைந்தாலும் காலியாக இருப்பது போல்      

 light weight ஆக இருக்கும்.



Saturday, 27 October 2012

முளைக்கட்டிய கொள்ளு சுண்டல் 

தேவையான பொருட்கள் :

1. கொள்ளு -1 கப் 

2. தண்ணீர் 

3. மிளகுதூள்  சிறிதளவு 

4. உப்புத்தூள் சிறிதளவு 

5. பசுநெய்  - 1 தேக்கரண்டி 

செய்முறை :1

     கொள்ளு தானியத்தை  ஒரு  பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 

12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு ஒரு  தட்டை கவிழ்த்து

மூடி தண்ணீரை வடிக்க வேண்டும். அப்படியே 24 மணி நேரம்

விட்டுவிட்டால் கொள்ளு முளைக்கட்டியிருக்கும். இந்த முளைக்கட்டிய

கொள்ளு தானியத்தை முன்று நிமிடம் ஆவியில் வேக வைத்து

எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

ஒரு தேக்கரண்டி பசுநெய் விட்டு, சுவைக்கேற்ப மிளகுதூள், உப்புத்தூள்

சேர்த்து பரிமாற வேண்டும்.

 

இது சுலபமாக செய்யக்கூடியது ,மிகவும் ஆரோக்யமானது. இதில்

அதிக அளவில் dietary fibre  உள்ளதால் எளிதில் ஜீரணமாவதுடன் உடல்

எடையை குறைக்க உதவுகிறது.

 

செய்முறை :2

       முளைக்கட்டிய கொள்ளு தானியத்தை ஆவியில் வேக வைத்து

எடுத்துக் கொள்ளவேண்டும் . வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு

தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்ததும் சிறிது

கடுகு, உளுந்து ஒரு தேக்கரண்டி  ,ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,

மிளகாய் ஒன்று ,  கருவேப்பிலை கொஞ்சம் சேர்த்து   தாளிக்கவும். 

முளைக்கட்டிய கொள்ளு, சுவைக்கேற்ப உப்பு  சேர்த்து  கிளறி இரண்டு

நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும்.

 

இதே சுண்டலை முளைக்கட்டாமல் வெறும் 18 மணி நேரம் ஊற

வைத்தும் செய்யலாம்.  

உணவின் தோற்றம்



நாம் இந்த உலகில் வாழ இன்றியமையாதது உணவு, உடை, உறைவிடம்.
இம்முன்றில் முதன்மையானது உணவு.  இது உயிர்களின் ஆதாரமாகவும், அடிப்படை தேடலாகவும் விளங்குகிறது இந்த உணவை நோக்கி ஆரம்பித்த பயணமே இன்று இந்த உலகம் இவ்வளவு விரிவடைய காரணமாக இருக்கிறது..

சாதாரணமாக கிழங்குகளையும் , கனிகளையும் இயற்கையாக உண்ட மனிதன், பிறகு  கிடைத்தவற்றை பக்குவப்படுத்தி  உண்ண கற்றுக்கொண்டான்.

நாக்கின் சுவையறிந்தவுடன் பக்குவப்படுத்துதலை (சமையலை ) ஒரு கலையாக பலவழிமுறைகளில்  செய்ய தொடங்கினான்.
அதனால் இந்த சமையற்கலை வளர்ந்து ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி பல்லாயிரகணக்கான உணவு வகைகளை நமக்கு தந்திருக்கிறது.

உணவுகளை தயாரித்தலோடு இந்த  கலை  முடிவடைவது இல்லை  அதை உள்ளன்போடு பரிமாறுவதும் உண்பவர்களின் நலனை எண்ணுவதும்  கூட இதை சேர்ந்ததே.