தேங்காய்பால் கேரட் அல்வா
தேவையான பொருட்கள் :
1. கேரட் -1/4 kg
2. தேங்காய்-1/2 முடி
3. கல்கண்டு தூள் செய்தது - 1 ஆழாக்கு (200 கிராம்)
4. பசுநெய் - 50 கிராம்
5. முந்திரி - 25 கிராம்
6. திட திராட்சை - 25 கிராம்
4. பசுநெய் - 50 கிராம்
5. முந்திரி - 25 கிராம்
6. திட திராட்சை - 25 கிராம்
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும், துருவிய தேங்காயை மிக்ஸ்யில்
போட்டு சிறிது வெந்நீர் விட்டு அரைத்து -100ml கெட்டியான பால்
எடுக்கவும் .
கேரட்டை துருவிக்கொள்ளவும், அடுப்பில் வாணலியை வைத்து
இரண்டு தேக்கரண்டி பசுநெய் விட்டு காய்ந்ததும் துருவிய கேரட்டை
போட்டு கிளறவும். கேரட் கொஞ்சமாக வதந்கியதும் தேங்காய்பால்
விட்டு இரண்டு நிமிடம் கிளறி மூடிவைக்கவும் .
இரு நிமிடம் கழித்து தூள் செய்த கல்கண்டை கொட்டி கிளறவும் .
சிறிது சிறிதாக பசுநெய் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும்.
கல்கண்டு நீர்த்து மீண்டும் இறுக ஆரம்பிக்கும், அப்போது
முந்திரி , திராட்சை இரண்டையும் பசுநெய்யில் வறுத்து கேரட்
அல்வாவில் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கவும். மிகவும்
சுவையான கேரட் அல்வா தயார்.
இந்த அல்வா குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும்
விரும்பி சாப்பிடுவார்கள். ஊட்டசத்து மிகுந்த உணவு ,
தேங்காய்பாலும் , கல்கண்டும் இயற்கை உணவு என்பதால் எளிதில்
ஜீரணித்து வயிறு இதமாக இருக்கும். மேலும் இது இரத்த விருத்தியை
ஏற்படுத்தும்.